பாடல் #254

பாடல் #254: முதல் தந்திரம் – 16. அறஞ்செய்வான் திறம் (தரும வழியில் நிற்பவர்களின் பெருமை)

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து
இழிக்கஅன் றென்செய்வீர் ஏழைநெஞ் சீரே.

விளக்கம்:

மும்மலங்களாகிய அழுக்குகளை ஓட்டிவிடும் உண்மை ஞானத்தை அறிந்து அந்த அறிவால் உள்ளத்தில் இறைவனை நிரப்பமாட்டீர்கள். கல்வியும் செல்வமும் நிறைந்து இருந்த நாட்களிலேயே தருமங்கள் செய்யாமல் விட்டுவிட்டீர்கள். தினமும் எழுந்து கண் விழித்திருப்பதனால் என்ன பயன்? ஒரு நாள் கண் மூடிய பிறகு சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று தீ வைத்து உடல் முழுவதும் தீயின் வெப்பம் பரந்து சுட்டெரிக்கும் நேரத்தில் என்ன செய்யப் போகின்றீர்கள்? வாழ்க்கை முழுவதும் தருமம் செய்யும் பரந்த மனது இல்லாமல் ஏழை மனதாகவே வாழ்ந்துவிட்டீர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.