பாடல் #185

பாடல் #185: முதல் தந்திரம் – 4. இளமை நிலையாமை

ஒன்றிய ஈரெண் கலையும் உடன்றன
நின்றது கண்டு நினைக்கிலர் நீதர்கள்
கன்றிய காலன் கருக்குழி வைத்தபின்
சென்றதில் வீழ்வர் திகைப்புஒழி யாரே.

விளக்கம்:

பெளர்ணமி அன்று முழுவதாக இருக்கும் நிலா பிறகு 16 கலைகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்துப் பின் முழுவதுமாக அமாவாசை அன்று மறைந்துவிடும் வழக்கத்தை ஒவ்வொரு மாதமும் பார்த்தாலும் அதன் பொருளை நினைக்காமல் இருக்கின்றனர் மூடர்கள். உயிர்களின் மூடத்தன்மையினால் அவர்கள் செய்யும் பல வினைகளைக் கண்டு கோபம் கொள்ளும் எமதர்மன் அவர்கள் மீண்டும் பிறக்க வைக்கும் குழிகளை (ஆசைகளை) வைத்தவுடன் அந்த குழிகளில் ஆசையினால் சென்று விழுகின்றன உயிர்கள். அப்படி ஆசையில் விழுந்தபின் இளமை அழிந்து முதுமைப் பெற்று இறக்கும் தறுவாயில் எமனைக் கண்டு ஏன் இப்படி நமக்கு நடக்கிறது என்று திகைப்பு மாறாமல் இருக்கின்றார்கள் இந்த மூடர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.