பாடல் #1055

பாடல் #1055: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (திரிபுரை சக்தியின் வடிவமும் தன்மைகளும்)

தானெங் குளனங் குளதையன் மாதேவி
ஊனெங் குளவங் குளவுயிர்க் காவலன்
வானெங் குளவங் குளமந்த மாருதங்
கோனெங்கு நின்ற குறிபல பாரே.

விளக்கம்:

இறைவன் எங்கெங்கெல்லாம் இருக்கின்றானோ அங்கெங்கெல்லாம் மாபெரும் தேவியாகிய இறைவியும் இறைவனோடு பின்னிப் பிணைந்து இருக்கின்றாள். உலகத்தில் உடலாக இருக்கும் அசையும் மற்றும் அசையாத பொருள்கள் அனைத்திற்குள்ளும் உயிராக நின்று இறைவனும் இறைவியும் பாதுகாக்கின்றார்கள். உலகத்தில் வெற்றிடமாக இருக்கும் அனைத்து இடங்களிலும் மென்மையான தென்றல் காற்றாக இறைவனும் இறைவியும் இருக்கின்றார்கள். அனைத்தையும் ஆளுகின்ற இறைவனும் இறைவியும் எங்கெங்கெல்லாம் எப்படியெல்லாம் இருக்கின்றார்கள் என்பதை பலவிதமான குறிப்புகள் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள்.

கருத்து: உலகத்திலுள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா பொருள்களும் ஏதோவொரு வகையில் உருமாறுகிறது. இந்த குறிப்பே இறை சக்தி அங்கே இருக்கின்றது என்பதற்கு சான்றாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.