பாடல் #1045

பாடல் #1045: நான்காம் தந்திரம் – 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி
ஓமாயை யுள்ளொளி யோராறு கோடியில்
தாமான மந்திரஞ் சத்திதன் மூர்த்திகள்
ஆமா யலவாந் திரிபுரை யாங்கே.

விளக்கம்:

மாமாயை, மாயை, வயிந்தவம், வைகரி, ஓமாயை, உள்ளொளி ஆகிய ஆறுவிதமான மாயையின் உச்ச நிலையில் உருவாகும் மந்திரங்கள் அனைத்தும் திரிபுரை சக்தியின் வடிவமாக இருக்கின்றது. இந்த வடிவங்களும் வடிவங்கள் இல்லாமலும் திருபுரை இருக்கின்றது.

குறிப்பு: பாடல் #401 இல் உள்ளபடி அசையும் சக்தியின் மையத்திலிருந்து தோன்றிய திரிபுரை எந்தெந்த வடிவங்களாகவும் வடிவம் இல்லாமல் இருக்கின்றது என்பதை இந்தப் பாடலில் அறியலாம்.

திரிபுரையின் ஆறு மந்திர வடிவங்கள்:

மாமாயை – வினைகள் இல்லாத சுத்த மாயை
மாயை – வினைகளோடு இருக்கும் மாயை
வயிந்தவம் – மாயையால் குழம்பி இருக்கும் ஞானசக்தி
வைகரி – முறைப்படி சத்தமாக கேட்கும் ஒலிவடிவம்
ஓமாயை – மாயையால் மறைக்கப்பட்ட பிரணவம்
உள்ளொளி – மாயையால் உருவான வெளிச்சமும் சத்தமும்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.