பாடல் #898

பாடல் #898: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

இணையார் திருவடி எட்டெழுத் தாகும்
இணையார் கழலிணை யீரைஞ்ச தாகும்
இணையார் கழலிணை ஐம்பத்தொன் றாகும்
இணையார் கழலிணை ஏழா யிரமே.

விளக்கம்:

ஈடுஇணையில்லாத இறைவனின் திருவடிகளின் உருவமே அகாரம் உகாரம் மகாரம் எனும் மூன்று எழுத்துக்கள் சேர்ந்த ஓங்காரமாகவும் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரமாகவும் இருக்கின்றது. அந்தத் திருவடிகளே உயிர்களின் உடலுக்குள் பத்துவித காற்றுக்களாகவும் மொத்தம் 51 இதழ்கள் கொண்ட ஆறு ஆதார சக்கரங்களின் 51 யோக நாடிகளாகவும் ஆதார ஏழாயிரத்திலிருந்து அதன் பரிணாமங்களில் மொத்தம் ஏழு கோடி வரையிலும் இருக்கும் மந்திரங்களாகவும் இருக்கின்றன.

குறிப்பு: இறைவனுடைய இணையில்லாத திருவடிகள் எதுவாகவெல்லாம் இருக்கின்றது என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.

One thought on “பாடல் #898

  1. சிவா Reply

    பாடலுடன் பொருள் மற்றும் இசைப்பது மிகவும் சிறப்பு

Leave a Reply to சிவாCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.