பாடல் #902

பாடல் #902: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

நடமிரண் டொன்றே நளினம தாகும்
நடமிரண் டொன்றே நமன்செய்யுங் கூத்து
நடமிரண் டொன்றே நகைசெயா மந்திரம்
நடம்சிவ லிங்கம் நலம்செம்பு பொன்னே.

விளக்கம்:

இறைவன் தாம் ஒருவனாகவே ஆடுகின்ற திருநடனங்கள் இரண்டு வகையாகும். அதில் முதலாவது அனைத்தையும் உருவாக்குகின்ற அழகிய ஆனந்த நடனம். இரண்டாவது அனைத்தையும் அழிக்கின்ற ருத்ர தாண்டவ கூத்தாகும். இந்த நடனம் கூத்து இரண்டையும் மகிழ்ச்சியோ துன்பமோ இல்லாமல் சமமாகப் பார்க்க வைக்கும் பிரணவ மந்திரத்தை உணர்ந்து இந்த இரண்டு திருநடனங்களின் உருவமாக இருக்கும் சிவலிங்கத் தத்துவமே தமக்குள்ளும் இருக்கிறது என்பதை உணர்ந்த சாதகர்களுக்கு செம்பு போன்ற கடினமான உடல் பொன் போல் ஜொலிக்கின்ற ஒளி உடம்பு ஆகிவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.