பாடல் #897

பாடல் #897: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

தலைவனு மாய்நின்ற தற்பரக் கூத்தனைத்
தலைவனு மாய்நின்ற சற்பாத் திரத்தைத்
தலைவனு மாய்நின்ற தாதவிழ் ஞானத்
தலைவனு மாய்நின்ற தாளிணை தானே.

விளக்கம்:

அனைத்திற்கும் தலைவனான இறைவன் அனைத்திற்கும் மேலான திருக்கூத்தின் தலைவனாகவும் அனைத்தையும் தாங்கி நிற்கும் சத்திய பாத்திரத்தின் தலைவனாகவும் பேரறிவான ஞானத்தின் தலைவனாகவும் இணையில்லாத திருவடிகளுக்கு தலைவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு: இறைவன் எதற்கெல்லாம் தலைவனாக இருக்கின்றார் என்பதை இப்பாடலில் அருளுகின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.