பாடல் #87

பாடல் #87: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

அங்கிமி காமைவைத் தானுல கேழையும்
எங்குமி காமைவைத் தானுடல் வைத்தான்
தங்கிமி காமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே.

விளக்கம்:

சூரியனின் நெருப்பு அதிகமாகி உலகங்களை அழிக்காதவாறு அளவோடு வைத்தவன். ஒவ்வொரு அண்டங்களிலும் ஏழு உலகங்களை அளவோடு வைத்தவன். இந்த உலகங்களில் உயிர்கள் பிறக்க வேண்டி உடலை அளவோடு வைத்தவன். அந்த உயிர்கள் மேல் நிலையை அடையும் பொருட்டு என்னுள் இருந்து இந்தத் திருமந்திரம் எனும் தமிழ்ச் சாத்திரத்தையும் அளவோடு சொல்ல வைத்தவன். சொல்லப்பட்ட இந்தத் திருமந்திரத்தின் பொருளை வெறும் வாயால் கூறி பயனில்லாமல் போகாதபடி அனுபவத்தின் மூலமே அறியும் பொருளாக அளவோடு வைத்தவன் இறைவனே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.