பாடல் #74

பாடல் #74: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

செப்பும் சிவாகமம் என்னும்அப் பேர்பெற்றும்
அப்படி நல்கும் அருள்நந்தி தாள்பெற்றுத்
தப்பிலா மன்றில் தனிக்கூத்துக் கண்டபின்
ஒப்பிலி கோடி யுகம்இருந் தேனே.

விளக்கம்:

சிவபெருமானாலேயே சொல்லப்பட்டதால் சிவாகமம் என்ற பேர் பெற்று பெருமை வாய்ந்த ஆகமங்களை அப்பெருமானே குருநாதராக இருந்து சொல்ல அவரின் திருவடிகளை வணங்கி பெற்றுக்கொண்ட பின் ஒரு குறையும் இல்லாத தில்லை அம்பலத்தில் ஆடிய இறைவனின் திரு நடனத்தைக் கண்டு களித்து அந்த ஒப்பில்லாத இறைவனின் நினைப்பிலேயே ஒரு கோடி யுகங்கள் இருந்தேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.