பாடல் #82: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு
ஞானத் தலைவிதன் நந்தி நகர்புக்கு
ஊனமில் ஒன்பது கோடி யுகந்தனுள்
ஞானப்பால் ஆட்டி நாதனை அர்ச்சித்து
நானும் இருந்தேன்நற் போதியின் கீழே.
விளக்கம்:
பேரறிவு ஞானத்தின் தலைவனாகிய எம் குருவாகிய இறைவன் இருக்கும் இடத்தில் ஒரு குறையும் இல்லாமல் ஒன்பது கோடி யுகங்களாக, ஞானத்தால் உருவாகும் அமிர்தப் பால் ஊற்றி இறைவனை அர்ச்சனை செய்து இறைவனின் நல்திருவடியின் கீழ் இருந்தேன்.