பாடல் #80

பாடல் #80: பாயிரம் – 5. திருமூலர் வரலாறு

இருந்தேன் இக்காயத்தே எண்ணிலி கோடி
இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே
இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே
இருந்தேன் என்நந்தி இணையடிக் கீழே.

விளக்கம்:

இந்த உடலில் எண்ணிலடங்காத கோடிக்கணக்கான வருடங்கள் இரவு பகல் இல்லாத இடத்தில் (சூட்சும வெளி) பல்லாயிரக்கணக்கான தேவர்களாலும் முனிவர்களாலும் சித்தர்களாலும் போற்றிப் புகழப்பெறுபவனும் எம் குருநாதனுமாகிய இறைவனின் ஈடு இணையில்லாத திருவடிகளின் கீழ் அமர்ந்து இருந்தேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.