பாடல் #747

பாடல் #747: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

விதித்த இருபத்தெட் டொடுமூன் றாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகணால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே.

விளக்கம்:

பாடல் #746 இல் உள்ளபடி அகயோகத்தில் இறைவன் விதித்த இருபத்தி எட்டு நாட்கள் முடிந்த பின் அனைத்தையும் தாண்டி இருக்கும் இறைவனை அறிய முயலும் சாதகர்கள் பாடல் # 467 ல் உள்ளபடி தமக்குள் இருக்கும் முப்பத்தாறு தத்துவங்களையும் ஒன்றாகத் தொகுத்து தமது மூச்சுக்காற்றை சுழுமுனை நாடியிலிருந்து 18 அங்குலம் தாண்டியிருக்கும் (புருவ மத்தியிலிருந்து தலை உச்சி 6 அங்குலம், தலை உச்சியிலிருந்து துவாதசாந்த வெளி 12 அங்குலம்) துவாதசாந்த வெளியில் பதித்து பாடல் #744 இல் உள்ளபடி உணர்ந்த நான்கு உயர் தத்துவங்களிலேயே மனதைச் செலுத்தி அகயோகம் பயின்றால் ஐந்து சிவதத்துவங்களாக இருக்கும் இறைவன் ஒருவனே என்பதை அறிந்து கொள்ளலாம்.

கருத்து: ஐந்து சிவதத்துவங்களாக இருக்கும் இறைவன் ஒருவனே சதாசிவமூர்த்தி என்பதை இருபத்தி எட்டு நாட்களுக்குப் பின் முயலும் அகயோகப் பயிற்சியால் அறிந்து கொள்ளலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.