பாடல் #742

பாடல் #742: மூன்றாம் தந்திரம் – 14. காலச்சக்கரம் (காலத்தின் சுழற்சி)

அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகுங்
கழிகின்ற காலறு பத்திரண் டென்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணற் றிருந்தே.

விளக்கம்:

உயிர்களின் வாழ்நாளில் அழியக்கூடிய நான்கு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது எதற்கும் பயனின்றி அழிகின்ற பகுதி பதிமூன்று வயது வரையான குழந்தை பருவம். இரண்டாவது பலராலும் சொல்லப்படுகின்ற அளவிற்கு வாழ்ந்து முடியும் பகுதி முப்பத்து மூன்று வயது வரையான வாலிப பருவம். மூன்றாவது பலருக்கும் பயனுள்ளதாக வாழ்ந்து முடியும் பகுதி அறுபத்தி இரண்டு வயது வரையான முதிர்வு பருவம். நான்காவது முழுவதும் வாழ்ந்து பரிபூரணம் என்று சொல்லப்படுகின்ற நிலையில் முடியும் பகுதி நூறு வயது வரையான வயோதிக பருவம். பதிமூன்று வயதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் இறைவனை அடையக்கூடிய வழிகளில் முயன்று இறைவனை உணர்ந்து விட்டால் எல்லைகள் இல்லாமல் எண்ணிலடங்காத ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கலாம்

கருத்து: உயிர்களின் வாழ்நாளில் நான்கு விதமான பகுதிகள் இருகின்றன. இந்தக் பகுதிகளுக்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்வதும் அதைத் தாண்டி இறையருளால் யோகப் பயிற்சிகள் செய்து நீண்ட காலம் வாழ்வதும் ஒவ்வொரு உயிரின் நோக்கத்தைப் பொறுத்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.