பாடல் #227

பாடல் #227: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

பெருநெறி யான பிரணவம் ஓர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறி யான திருகை இருத்திச்
சொரூபம தானோர் துகளில்பார்ப் பாரே.

விளக்கம்:

முக்திக்கு வழிகாட்டும் பெரிய நெறியாகிய ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை பொருளுணர்ந்து ஜெபித்து குருவானவர் வழிகாட்டிய நெறிகளையே பின்பற்றி குருவானவர் கூறிய மந்திர உரைகளையே எப்போதும் ஜெபித்து இறைவனை அடைய நான்கு வேதங்களிலும் (1. ரிக் வேதம், 2. யஜுர் வேதம், 3. சாம வேதம், 4. அதர்வண வேதம்) சொல்லப்பட்டிருக்கும் நெறிகளின்படி வாழ்ந்து அந்த நான்கு வேதங்களின் உட்பொருளாக இருக்கும் இறைவனை தமக்குள் வைத்து தியானித்து தமது உருவத்தையே இறைவனது உருவமாக பாவித்து தமது உடலில் உள்ள ஒவ்வொரு துகளிலும் இறைவனை பார்ப்பவர்கள் அந்தணர்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.