பாடல் #228

பாடல் #228: முதல் தந்திரம் – 12. அந்தணர் ஒழுக்கம் (அந்தணர் என்பது யார், அவர் எப்படி இருக்க வேண்டும்)

சத்திய முந்தவம் தான்அவன் ஆதலும்
எய்த்தகும் இந்திய மீட்டியே வாட்டலும்
ஒத்த உயிருடல் உண்டாய் உணர்வுற்றுப்
பெத்தம் அறுத்தலும் ஆகும் பிரமமே.

விளக்கம்:

சத்தியத்தையும் தவத்தையும் இடைவிடாமல் காத்து பின்பற்றுவதும் தாமே இறைவன் என்று உணர்வதும், ஆசை வழியே செல்லும் ஐந்து விதமான இந்திரியங்களையும் (கண் – பார்த்தல், காது – கேட்டல், மூக்கு – நுகர்தல், வாய் – பேசுதல், உடல் – உணர்தல்) ஆசை வழியில் போகாமல் தடுத்து அவற்றை அடக்கித் தாம் நினைத்தபடி அவற்றை வேலை செய்ய வைப்பதும் உயிரும் உடலும் ஒன்றாக இருந்து உள்ளிருப்பவன் இறைவனே என்பதை உணர்ந்து உலகப் பற்றுக்களையெல்லாம் அறுத்துவிடுவதும் ஒருவரை பிரம்மம் ஆக்கிவிடும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.