பாடல் #1145

பாடல் #1145: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

முச்சது ரத்தி லெழுந்த முளைச்சுடர்
எச்சது ரத்து மிடம்பெற வோடிடக்
கைச்சது ரத்துக் கடந்துள் ளொளிபெற
எச்சது ரத்து மிருந்தனள் தானே.

விளக்கம்:

பாடல் #1144 இல் உள்ளபடி மூன்று கோணங்களை உடைய சதுர அமைப்பில் இருக்கும் மூலாதார சக்கரத்திலிருந்து விதை போல முளைத்துக் கிளம்பிய குண்டலினி அக்னிச் சுடரானது ஒவ்வொரு சக்கரங்களுக்கும் சென்று அங்கிருந்து தொடர்ந்து மேலே சகஸ்ரதளத்தை நோக்கிச் சென்று தலை உச்சித் துளையைக் கடந்து பரவெளிக்குள் சென்று அங்கிருக்கும் ஜோதி வடிவான இறைவனை அடைந்து அவரிடமுள்ள ஒளியைப் பெற்று விட்டால் அந்த ஒளியானது இறைவியாக சாதகருக்குள் நுழைந்து அவருக்குள் இருக்கும் அனைத்து சக்கரங்களிலும் அமர்ந்து விடுவாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.