பாடல் #1140

பாடல் #1140: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

உடையவ னங்கி யுருத்திர சோதி
விடையவ னேறி விளங்கி யிருக்கும்
கடையவர் போயிடுங் கண்டவர் நெஞ்சத்
தடையது வாகிய சாதகர் தாமே.

விளக்கம்:

பாடல் #1139 இல் உள்ளபடி உள்ளத்திற்குள் தெளிவு பெற்ற சாதகர்களுக்கு மீதி இருக்கும் கர்மங்களையும் பிறவிகளையும் எரித்து அழிக்கும் அக்னியாக உருத்திரனின் அம்சம் ஜோதியாக காளையின் மேல் வீற்றிருந்து சாதகருக்கு தரிசனம் கொடுக்கின்றார். இதை தரிசித்ததால் தமது நெஞ்சத்திற்குள் இறைவனை அடையும் படி வீற்றிருக்கப் பெற்றவர்கள் சாதகர்கள் ஆவார்கள்.

குறிப்பு: இறையருளால் இறைவனின் அம்சத்தை தரிசித்து தமது கர்மங்களையும் பிறவிகளையும் நீக்கப் பெற்றவர்களே சாதகர்கள் ஆவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.