பாடல் #1131

பாடல் #1131: நான்காம் தந்திரம் – 7. பூரண சக்தி (சக்தி சிவத்தோடு சேர்ந்திருக்கும் பரிபூரணத் தன்மை)

ஆணைய மாயருந் தாதுள் ளிருந்தவர்
மாணைய மாய மனத்தை யொருக்கிப்பின்
பாணைய மாய பரத்தை யறிந்தபின்
தாணைய மாயதன் னாதனத் தானே.

விளக்கம்:

பாடல் #1130 இல் உள்ளபடி இறைவனை அடைவதற்கு வேண்டிய ஞானத்தை ஆணையாக இறைவி அருளிய படியே இன்ப துன்பங்களை அனுபவிக்காமல் உள்ளுக்குள் இறைவியை தியானித்துக் கொண்டே இருக்கின்ற அடியவர்களின் மாயையால் மயங்கி ஆசையின் வழியே செல்கின்ற மனதை அடக்கி ஒருமுகப்படுத்தி அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய இறைவனை அவர்களுக்குள் அறிந்து உணர்ந்து கொள்ளும்படி இறைவி அருளுகின்றாள். அவ்வாறு பரம்பொருளை அறிந்து கொண்ட அடியவர்களின் உள்ளத்தையே தமக்கு மிகவும் பிடித்த ஆசனமாக எடுத்துக் கொண்டு இறைவனும் வந்து வீற்றிருப்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.