பாடல் #547

பாடல் #547: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

உடையான் அடியார் அடியா ருடன்போய்ப்
படையா ரழன்மேனி பதியைப் புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
உடையான் வருகென ஓலமென் றாரே.

விளக்கம்:

அனைத்தையும் தனக்குள் உடைய இறைவனின் அடியவர்களான பெரியோர்களுக்கு அடியவர்களாகி தேவலோகப் படைகளை உடைய ஒளி உடம்போடு இருக்கும் சிவபெருமானின் திருக்கயிலாயத்திற்குச் செல்லுபவர்களை அங்கே வாயிற் காவலர்களாக இருக்கும் சிவகணங்கள் கண்டு இறைவனிடம் கூற அனைத்தும் அறிந்த இறைவன் உமக்கு அபயம் உள்ளே வருக என்று அருள் புரிந்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.