பாடல் #543

பாடல் #543: இரண்டாம் தந்திரம் – 25. பெரியாரைத் துணைக்கோடல் (பெரியவர்களின் துணையைப் பெறுதல்)

ஓடவல் லார்தம ரோடு நடாவுவன்
பாடவல் லாரொலி பார்மிசை வாழ்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர்பி ரானொடுங்
கூடவல் லாரடியே கூடுவன் யானே.

விளக்கம்:

திருத்தலங்களில் யாத்திரை செய்பவர்களுடன் யானும் நடப்போம். இறைவனை பக்தியுடன் பாடக்கூடியவர்களின் பாடலைக் கேட்டு யானும் இன்புற்று இருப்போம். இறைவனைத் தனக்குள்ளே தேடி அடையக்கூடியவர்களுக்கு அருளுகின்ற மகாதேவனுடன் இணையக் கூடிய ஆற்றலுள்ள பெரியோர்களின் திருவடியோடு யானும் இணைந்து இருப்போம்.

உட்கருத்து: இறைவனை அடையக்கூடிய வழிகளில் செல்பவர்களுக்கு இறைவனே பெரியவராக உடன் இருந்து இறைவனை அடைய வழிகாட்டுவார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.