பாடல் #53

பாடல் #53: பாயிரம் – 2. வேதச் சிறப்பு

இருக்குரு வாம்எழில் வேதத்தின் உள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லும்
கருக்குரு வாய்நின்ற கண்ணனும் ஆமே.

விளக்கம்:

சொல்லழகு மிகுந்த வேதத்தின் உள்ளே மந்திர வடிவாக இருப்பவனும் உணர்ந்து வேத‍த்தை சொல்லும் வேதியர் உள்ளத்தில் உணர்வாக இருப்பவனும் வேதம் சொல்லும் வழி நடக்கும் சிறந்த வேதியர்கள் ஓதும் வேதத்தின் சொற்களில் மறைப் பொருளாகவும் அனைத்தையும் உருவாக்கிய சக்தியாக நின்று அருளுபவனும் எம்பெருமான் முக்கண் முதல்வன் சிவபெருமானே ஆவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.