பாடல் #362

பாடல் #362: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே.

விளக்கம்:

பிரளய வெள்ளத்தில் பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. உலகெங்கும் படைத்தல் தொழில் நின்றது. அந்நேரத்தில் பிரமனும் திருமாலும் தங்கள் கடமையை செய்யாமல் யாமே தலைவர் என்று ஒருவருக்கொருவர் மாறுபட்டு கூறிக்கொண்டனர். சதாசிவமூர்த்தியான இறைவன் பேரொளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று வெள்ள நீரெல்லாம் வற்றச் செய்தான். சதாசிவமூர்த்தியின் ஆற்றலைக் கண்ட பிரமனும் திருமாலும் தலைவன் யார் என்பதை உணர்ந்தார்கள். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு சதாசிவமூர்த்தி நெருப்பு மலையாக நின்று அருள் செய்தார்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.