பாடல் #363

பாடல் #363: இரண்டாம் தந்திரம் -5 பிரளயம்

அலைகடல் ஊடறுத் தண்டத்து வானோர்
தலைவன் எனும்பெயர் தான்றலை மேற்கொண்
டுலகார் அழலைக்கண் டுள்வீழா தோடி
அலைவாயில் வீழாமல் அஞ்சலென் றானே.

விளக்கம்

பாடல் #362ல் உள்ளபடி பேரோளி மிகுந்த நெருப்பு மலையாக இருந்த சதாசிவமூர்த்தி கடலை உடுறுவி கீழையும் வானத்தை ஊடுறுவி மேலேயும் இருந்து வானவர்கள் அனைவருக்கும் தலைவன் என்னும் பெயர் பெற்று உலகம் முழுவதும் நிறைந்த ஊழித்தீயில் உலக மக்கள் நெருப்புப் பிழம்பைப் பார்த்துப் பயந்து வெள்ள நீரில் விழுந்து விடாதபடிக்கு யாரும் அஞ்சாதீர்கள் என்று கூறி அருள் செய்தான்.

Related image

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.