பாடல் #320

பாடல் #320: முதல் தந்திரம் – 23. நடுவுநிலைமை (விருப்பு வெறுப்பு இன்றி ஞானத்தை மட்டுமே பற்றி இருப்பது)

நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே.

விளக்கம்:

தனக்கோ உற்றார் உறவினர் மற்ற உயிர்கள் வாழும் உலகத்திற்கோ என்ன நடந்தாலும் இன்பம் துன்பம் என எது வந்தாலும் எல்லாம் இறை செயல் என்று எதனாலும் பாதிக்காத விருப்பு வெறுப்பு இல்லாமல் தான் செல்லும் இறை வழியிலிருந்து சிறிதும் மாறாமல் நடுநிலையான மனநிலையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்மையான ஞானம் கிடைப்பதில்லை. அப்படி இருப்பவர்களுக்கு நரகமும் இல்லை. அப்படி இருக்கக்கூடியவர்களே நல்ல தேவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நின்ற நெறியிலேயே யானும் நிற்கின்றேன்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.