பாடல் #302

பாடல் #302: முதல் தந்திரம் – 21. கேள்வி கேட்டமைதல் (கேள்வி ஞானம் பெற்று இறைவனை அடைதல்)

மயன்பணி கேட்பது மாநந்தி கேட்பின்
அயன்பணி கேட்பது அரன்பணி யால்
சிவன்பணி கேட்பவர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே.

விளக்கம்:

குருநாதராக இருந்து இறைவன் வழங்கிய சிவ ஆகமங்களை கேட்டு உணர்ந்தால் அதன் மூலம் திருமால் இறைவனின் ஆணை பெற்று காக்கும் தொழிலை புரிவதையும் பிரம்மன் இறைவனின் ஆணை பெற்று படைக்கும் தொழிலை புரிவதையும் உருத்திரன் இறைவனின் ஆணை பெற்று அழிக்கும் தொழிலை புரிவதையும் தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு தெரிந்து உணர்ந்தபின் இறைவனிடம் சிவபணி வேண்டும் என்று எவர் ஒருவர் கேட்டுப் பெறுகிறாரோ அவரே அடுத்து தேவர்களாக மாறி என்றும் அழியாத இறைவனின் திருவடிகளைப் பற்றிக்கொண்டு சிவபணி புரியலாம்.

குறிப்பு : அனைத்து தேவர்களும் சிவனடியாராக இருந்து இறைவனிடம் சிவபணி கேட்டு பெற்று தேவர்களாக நின்று அருள் புரிபவர்கள் தான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.