பாடல் #299

பாடல் #299: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்
துடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் திலிருந் தானே.

விளக்கம்:

கடலாக இருப்பவனும் மலையாக இருப்பவனும் ஐந்து பூதங்களையே தனக்கு உடலாக வைத்திருப்பவனும் உலகம் தோன்றி அழியும் பலகோடி ஊழிக்காலங்களிலும் மாறாமல் நின்று வலிமையான காளையின் மேல் ஏறிவரும் அமரர்களுக்கெல்லாம் தலைவனுமான இறைவனை உண்மை கல்வி ஞானத்தைப் பெற்று தம் மனதில் இடம்கொடுப்பவர் நெஞ்சத்தில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.