பாடல் #298

பாடல் #298: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

பற்றது பற்றின் பரமனைப் பற்றுமின்
முற்றது எல்லா முதல்வன் அருள்பெறில்
கிற்ற விரகின் கிளரொளி வானவர்
கற்றுஅவர் பேரின்பம் உற்றுநின் றாரே.

விளக்கம்:

எதையாவது வேண்டும் என்று எண்ணி அதனை அடைய ஆசைப்பட்டால் இறைவன் வேண்டும் என்று ஆசைப்பட்டு அவனை அடையுங்கள். அனைத்திற்கும் முதல்வனாகிய இறைவனை அடைந்து அவன் அருளைப் பெற்றுவிட்டால் எல்லா ஆசைகளுக்கும் மேலானதை அடைந்திருப்பதை உணரலாம். தவ ஒளியுடன் இருக்கும் தேவர்களை விட உண்மைக்கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை உணர்ந்தவர்கள் மிகுந்த பேரின்பம் பெறுகிறார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.