பாடல் #240

பாடல் #240: முதல் தந்திரம் – 13. இராசதோடம் (அரசாட்சி முறை)

வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன்
வேடநெறி நிற்போர் வேடம்மெய் வேடமே
வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்
வேடநெறி செய்தால் வீடது வாகுமே.

விளக்கம்:

போட்டுக்கொண்டிருக்கும் வேடத்திற்கு உண்டான வழிமுறைகளை மேற்கொண்டு அதன்படி நடக்க இயலதவர்கள் இந்த வேடம் போட்டுக்கொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. போட்டுக்கொண்டிருக்கும் வேடத்திற்கு உண்டான வழிமுறைகளை மேற்கொண்டு அதன்படி நடப்பவர்களே உண்மையான வேடம் தரித்தவர்கள் ஆவார்கள். தான் போட்டிருக்கும் வேடத்திற்கு ஏற்ற வழியில் செல்லாத வேடதாரிகளை அந்த நாட்டை ஆளும் வலிமை மிக்க அரசன் கண்டுபிடித்து தண்டித்து வேடத்திற்கு ஏற்றபடி நடக்கச்செய்வது அரசனுக்கு முக்தியை வழங்கிவிடும்.

குறிப்பு: மக்களில் விவசாயம், துணி நெய்தல், மண்பாண்டம் செய்தல் போன்று இன்னும் பல வேலைகளை அந்த நாட்டில் வாழும் மக்களில் சிலர் அந்தந்த தொழிலுக்கு ஏற்ற வேடம் ஏற்று அந்த வேலைகளை செய்யாமல் சோம்பேரிகளாக இருப்பார்கள். அவர்களை அரசன் கண்டு பிடித்து தன் வலிமையால் தண்டித்து அவர்கள் ஏற்றுக்கொண்ட வேடத்திற்க்கான தொழிலை அரசன் செய்ய வைத்தால் அது அவர்களுக்கும் அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும், நாட்டுக்கும் நன்மை உண்டாக்கும். இதைச் செய்த பயனால் அரசனுக்கு முக்தி கிடைக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.