பாடல் #220

பாடல் #220: முதல் தந்திரம் – 11. அக்கினி காரியம் (யாகம் / வேள்வி செய்வதன் முக்கியத்துவம்)

பெருஞ்செல்வங் கேடென்று முன்னே படைத்த
அருஞ்செல்வந் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத் தின்பம் வரவிருந் தெண்ணிப்
பருஞ்செல்வத் தாகுதி வேட்கநின் றாரே.

விளக்கம்:

உலகத்தில் கிடைக்கும் செல்வங்கள் எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அவை உயிர்களுக்கு துன்பத்தையே கொடுக்கும் கேடு என்பதை உணர்ந்து கொண்டு அரிதான வேதத்தை தந்த இறைவனை நாடுங்கள். இறைவனை அடைந்து பேரின்பமாகிய இறைசெல்வம் கிடைக்க வேண்டும் என்று வேத முறைப்படி யாகத்தை வளர்த்து அதன் மூலம் அதைப் பெறுவதற்கு உயிர்கள் முயற்சி செய்கின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.