பாடல் #209

பாடல் #209: முதல் தந்திரம் – 10. நல்குரவு (வறுமை)

புடவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை
அடையப்பட் டார்களும் அன்பில ரானார்
கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை
நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்க்கே.

விளக்கம்:

உயிர்களிடம் இருந்த ஆடைகளை திரும்பத் திரும்ப போட்டுக்கொண்டதால் கிழிந்து போனது. அவர்களின் வாழ்க்கையும் துன்பப் பட்டுக் கசந்து போனது. அவருக்கென்று இருந்த துணையும் பிறந்த குழந்தைகளும் பெற்ற தாய் தந்தையரும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளும் என அனைவருமே அவர்களின் மேல் அன்பில்லாமல் விலகிப் போய்விட்டனர். அவர்களுக்குத் தானமாகவோ இல்லை கடனாகவோ பொருள் கொடுப்பவர்களும் யாரும் இல்லை. அவர்களுக்குச் சிறப்புடைய நாட்கள் என்று ஒன்றும் இல்லாமல் போனது. அப்படிச் சிறப்பான நாட்கள் இல்லாததால் எதையும் கொண்டாடுவதும் இல்லாமல் போனது. அவர்கள் முன்பு தலை நிமிர்ந்து நடந்த நடை இப்போது இல்லாமல் போனது. வெறும் இயந்திரம் போன்றே இவர்கள் நாட்களைக் கழித்து வாழ்கின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.