பாடல் #191

பாடல் #191: முதல் தந்திரம் – 5. உயிர் நிலையாமை

சென்றுணர் வான்திசை பத்தும் திவாகரன்
அன்றுணர் வாலளக் கின்ற தறிகிலர்
நின்றுண ரார்இந் நிலத்தின் மனிதர்கள்
பொன்றுணர் வாரிற் புணர்க்கின்ற மாயமே.

விளக்கம்:

சூரியன் தானிருக்கும் இடத்திலிருந்தே பத்து திசைகளுக்கும் (வடக்கு, வட கிழக்கு, கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, மேல், கீழ்) தனது கதிர்களை அழைத்துச் சென்று அதன் மூலம் உருவாகிய வெளிச்சத்தினால் அனைத்தையும் உணர வைக்கின்றான். அதுபோலவே இறைவனும் உயிர்களின் உடலுக்குள்ளேயே உயிராக இருந்துகொண்டு அனைத்தையும் உணர வைக்கின்றான். இந்த உண்மையை உயிர்கள் அறிவதில்லை. இந்த உலகில் மீண்டும் மீண்டும் பிறந்து இறைவன் காட்டும் அனைத்தையும் கண்டும்கூட இறைவனை உணராத இந்த உலகத்து மனிதர்கள் தம்மைப் போலவே இந்த உலகத்தில் பிறந்து அனைத்தும் இறப்பதைக் கண்டும்கூட தமக்கும் இறப்பு ஒரு நாள் வரும் என்பதை உணராமல் தாம் இறக்கும் தருணம் மட்டுமே அதை உணரும் மற்ற மனிதர்களோடே கலந்து இறைவனை அறிய முயலுவது ஆச்சரியமே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.