பாடல் #1300

பாடல் #1300: நான்காம் தந்திரம் – 11. சாம்பவி மண்டலச் சக்கரம் (சிவசக்தி சேர்ந்திருக்கும் சிவலிங்கத் திருமேனி சக்கரம்)

ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்
வேறுரு வாக விளைந்து கிடந்தது
தேறிநீ ரும்மிற் சிவாய நமவென்று
கூறுமின் கூறிற் குறைகளு மில்லையே.

விளக்கம்:

ஆதிகாலத் தமிழில் இருக்கும் 51 எழுத்துக்களும் உண்மை ஞானத்தைக் கொடுப்பவை ஆகும். இவை வெவ்வேறு உருவங்களில் (எழுத்து வடிவங்களில்) சூட்சுமமாக சாம்பவி மண்டலச் சக்கரத்தில் வளர்ச்சி பெற்று பரவிக் கிடக்கின்றது. இவற்றின் உண்மைப் பொருளை ஆராய்ந்து உணர்ந்து சாதகர்கள் தமக்குள் ‘சிவாய நம’ எனும் மந்திரத்தை அசபையாகச் செபித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு எந்தவிதமான குறைகளும் இருக்காது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.