பாடல் #104

பாடல் #104: பாயிரம் – 9. மும்மூர்த்திகளின் முறைமை

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத் தலர்மிசை யானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்றெனார்
பேதித் துலகம் பிணங்குகின் றார்களே.

விளக்கம்:

ஆதியிலிருந்து அனைத்திற்கும் ஆரம்பமாக இருக்கின்ற உருத்திரனும் அணிகின்ற மணிகளைப் போன்ற நீல நிறம் படைத்த திருமாலும் படைப்புத் தந்தையாக தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மனும் ஆகிய இவர்கள் மூவரும் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் தமக்குக் கொடுக்கப்பட்ட தொழில்களில் தனிப்பட்டு நின்றாலும் அவர்களுக்குள் இருந்து இயக்கும் சிவத்தின் தொடர்ச்சியில் ஒன்றுபட்டு இருக்கின்றார்கள் என்பதை உணரலாம். இதை அறியாமல் அவர்களின் தொழில்களை வைத்து வேறு வேறாகப் பிரித்து, இதில் யார் பெரியவர் யார் சிறியவர் என்று தேவையில்லாத குழப்பத்தில் தமக்குள் சண்டையிட்டுக்கொண்டு உலகத்தவர்கள் துன்பப்படுகின்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.