பாடல் #1033

பாடல் #1033: நான்காம் தந்திரம் – 4. நவகுண்டம் (மந்திர சித்தி பெற்றவர் தமது தொழிலுக்கு ஏற்ப ஹோமம் செய்யும் ஒன்பது வகை குண்டங்கள்)

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலைஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.

விளக்கம்:

பாடல் #1032 இல் உள்ளபடி தம்மை இறைவனாக உணர்ந்த சாதகர்கள் தமக்குள் ஒரு பாகமாக இருக்கும் இறைவன் இருபது கைகள், இருபது கால்கள், பத்து முகங்கள், இருபது கண்கள், மலர் போன்ற இரண்டு திருவடிகள், அடி முடியாக இருக்கும் இரண்டு சுடரொளி ஆகியவற்றைக் கொண்டு இருப்பார். நன்மையாகவே இருக்கும் இந்த இறைவனை தஞ்சம் என்று சரணடைவார்கள்.

விளக்கம்:

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.