பாடல் #904

பாடல் #904: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

திருவம் பலமாகச் சீர்ச்சக் கரத்தைத்
திருவம் பலமாக ஈராறு கீறித்
திருவம் பலமாக இருபத் தைஞ்சு
திருவம் பலமாச் செபிக்கின்ற வாறே.

விளக்கம்:

இறைவன் திருக்கூத்தாடுகின்ற திருவம்பலத்தை ஸ்ரீ சக்கரமாக வடிவமைக்க மேலிருந்து கீழாக ஆறு கோடுகளும் இடமிருந்து வலமாக ஆறு கோடுகளும் வரைந்தால் அதில் இருபத்தைந்து கட்டங்கள் வரும். இந்த கட்டங்களுக்குள் சிவயநம எனும் மந்திர எழுத்துக்களை மாற்றி எழுதி அதை உச்சரிக்காமல் ஜெபிக்க சாதகரின் உடம்பு இறைவன் திருக்கூத்து ஆடுகின்ற திருஅம்பலமாகும்.

குறிப்பு: இப்பாடலில் வரும் ஸ்ரீசக்கரம் என்பது புடம் செய்யப்பட்ட கட்டம் வரைந்து சிவயநம என்னும் எழுத்தை எழுத தகுதிவாய்ந்த உலோகத்தை குறிக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.