மூலநட்சத்திரத்தில் குருநாதர் கருத்துக்கள் #28

27-7-2007 அன்று நடந்த மூல நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:

முற்பிறவியில் சென்றது இப்பிறவியில் பாதிப்பது ஏன்? முற்பிறவியில் சென்றதை மறந்துவிட வேண்டும் என்று கூறுகிறார்களே அவ்வாறு மறந்தால் முற்பிறவியில் நாம் செய்த கர்மா குறையும் என்று எடுத்துக் கொள்ளலாமா? இது உண்மையா?

அன்பரே நன்றாக சிந்திக்க வேண்டும். அன்று விதைத்தது இன்று பயிராக நிற்கின்றது. விதைத்தது மறந்து நின்றால் பயிரானது இறையருள் இருந்தால் வளர்ந்து நிற்கும் இறையருள் இல்லையேல் காய்ந்து போகும். சென்ற பிறவியே இப்பிறவியையும் வரும் பிறவியையும் முடிவு செய்யும். வினையைத் தாங்கும் சக்தி நம்முடன் இருத்தல் வேண்டும். அந்த வினையைத் தாங்கும் சக்தியைப் பெற இறைவன் காட்டிய வழியைப் பின்பற்ற வேண்டும். இப்பிறவியில் முன்பிறவியை நாம் மறந்து விடுகின்றோம். இப்போது நடப்பது முற்பிறவியின் வினையாலே என உணர்ந்தால் இறைவன் அருளால் அனைத்தும் சமமாகும். இறப்பதும் பிறப்பதும் இறைவன் விதியே கர்மவிதியால் அவ்விதிப்படி நம் வாழ்வு முறை அமைகிறது. கர்மத்தை இறைவன் மாற்ற முடியாது என்பது பொது விதி. இருப்பினும் இறைவனின் அருளை முழுமையாகப் பெற்றால் இறைவன் அவ்வாறு நினைத்தால் உங்கள் விதியை மாற்ற முடியும். இந்த உணர்வோடு இறைவன் திருவடியை நாடுங்கள் இந்த உணர்வோடு சரணடையுங்கள். இந்த உணர்வோடு திருவடி பணிந்திட நல்வழி நல்மார்க்கம் நல்மாற்றம் உண்டு.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.