பாடல் #388

பாடல் #388: இரண்டாம் தந்திரம் – 9. சர்வ சிருஷ்டி (அனைத்தும் உருவாகிய முறை)

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப்பு ஆமே.

விளக்கம்:

இறைவனது தன்மையானது பஞ்ச பூதங்களில் நீரில் சுவையாகவும் நெருப்பில் ஒளியாகவும் காற்றில் உணர்வாகவும் ஆகாயத்தில் ஒலியாகவும் நிலத்தில் உடல் சார்ந்த உயிர்களாகவும் பிறந்து இருக்கின்றது.

உட்கருத்து: பஞ்ச பூதங்கள் ஐந்தும் இறைவனது பண்புகளில் இருந்து உருவானவையே. உலகங்கள் அனைத்தும் இவற்றில் அடக்கம்.

One thought on “பாடல் #388

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.