பாடல் #884

பாடல் #884: நான்காம் தந்திரம் – 1. அசபை (உச்சரிக்கப் படாமல் மூச்சுக்காற்றோடு சேர்ந்து இயக்கும் மந்திரம்)

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகல் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தை
ஏற்றுகின் றேன்நம் பிரானின்ஓர் எழுத்தே.

விளக்கம்:

ஞானங்களிலெல்லாம் மேன்மையானது என்று ஞானியரால் புகழப்படுகின்ற சிவஞானத்தையே யான் போற்றிக் கொண்டாடுகிறேன். எனது சிந்தனையில் அனைத்திற்கும் தலைவனாகிய இறைவனின் போற்றுதற்குரிய திருவடிகளையே சிந்தித்து சிவஞானத்தில் தெளிவு பெறுகிறேன். யான் தெளிந்து பெற்ற சிவயோகத்தை உங்களுக்கும் சொல்லுகின்றேன் கேளுங்கள். சிவயோகமாவது நமது இறைவனைப் போற்றும் மந்திரங்கள் அனைத்திற்கும் மேலானதாகிய ஓங்காரம் எனும் ஒற்றை எழுத்து மந்திரத்தை உச்சரிக்காமல் எண்ணத்தில் வைத்து மூச்சுக்காற்றோடு கலந்து ஜெபித்துக் கொண்டே இருப்பதாகும். இதையே யானும் எப்போதும் செய்து கொண்டே இருக்கிறேன்.

One thought on “பாடல் #884

  1. நடராஜன் அர்ஜீனன் Reply

    ஞானத் தேடல்… ஞானத் தெளிவு இதன் திறவுகோல் திருமந்திரம்.

Leave a Reply to நடராஜன் அர்ஜீனன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.