பாடல் # 819 : மூன்றாம் தந்திரம் – 18. கேசரி யோகம் (பார்வையை மேல் நோக்கி செலுத்தினால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ஆற்றலை பெறுவர்)
ஒழிகின்ற வாயுவும் உள்ளே அமருங்
கழிகின்ற வாயுவும் காக்கலு மாகும்
வழிகின்ற காலத்து வட்டக் கழலைப்
பழிகின்ற காலத்துப் பையகற் றீரே.
விளக்கம் :
வெளியில் செல்லும் மூச்சுக்காற்றை கேசரி யோகத்தின் மூலம் உள்ளே வைத்தால் வெளியே வராமல் உடம்பில் இருக்கின்ற அந்த மூச்சுக்காற்று உடம்பில் இருந்து உயிர் வெளியே செல்லாமல் காக்கும். வரும் காலத்தில் குண்டலி சக்தியின் தலையில் உள்ள பிரமரந்திரத்தை அடைய கற்றுக் கொள்வீர்கள்.
![THE FIRST BOOK Chapter II On questions put by S’aunaka and other Rsis p. 3 1-5…](https://i0.wp.com/i.pinimg.com/564x/bd/21/4c/bd214c83bec6f5ef408b0d8b23442172.jpg?w=650&ssl=1)