பாடல் #296

பாடல் #296: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

ஆய்ந்துகொள் வார்க்கரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பது தூய்மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்டவல் லார்கட்கு
வாய்ந்தது மனமல்கு நூலேணி யாமே.

விளக்கம்:

உண்மை கல்வியான ஞானத்தை ஆராய்ந்து உணர்ந்து கொள்பவர்களின் உள்ளத்துக்குள்ளேயே இறைவன் வெளிப்படுவான். மணிவிளக்கின் உள்ளிருந்து வெளிப்படும் நெருப்பு வெளிச்சத்தைப் போல தாம் உணர்ந்த கல்வி ஞானத்தின் மூலம் இறைவனை ஜோதியாக தமக்குள் தரிசிக்க பெற்றவர்களுக்கு இறைவனை அடைய மனம் தகுதிபெற்று அந்த மனமே அவர்களை முக்திக்கு ஏற்றிவிடும் ஏணியாகவும் இருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.