பாடல் #294

பாடல் #294: முதல் தந்திரம் – 20. கல்வி (உண்மை அறிவான ஞானம்)

துணையது வாய்வரும் தூயநற் சோதி
துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்
துணையது வாய்வரும் தூயநற் கந்தம்
துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

விளக்கம்:

பாடல் #293 இல் கூறியுள்ளபடி என்றும் அழியாத உடலைப் பெற்ற உயிர்களுக்கு துணையாக கூடவே வருபவை தூய்மையான பேரொளி ஜோதியாகிய இறைவனும் அந்த உயிர்கள் வேறு உயிர்களுக்கு சொன்னது அப்படியே உடனே நடக்கும் சத்தியவாக்கும். அவர்கள் செய்த நல்ல கர்மங்களின் நல்ல ஜென்மாந்திர வாசனையும் உண்மையான ஞானமாகிய கல்வியும் அந்த உயிர்களுடன் எப்போதும் துணையாக வருபவை ஆகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.