பாடல் #281

பாடல் #281: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

இன்பப் பிறவிக் கியல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில்பல எண்ணினும்
அன்பிற் கலவிசெய் தாதிப் பிரான்வைத்த
முன்புஇப் பிறவி முடிவது தானே.

விளக்கம்:

உயிர்கள் பிறந்த பிறவியிலேயே பேரின்பம் அடைவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் இறைவன் செய்து வைத்திருந்தாலும் உயிர்கள் தாம் எடுத்த பிறவியில் துன்பத்தைத் தரக்கூடிய உலக ஆசைகளின் வழியே பலவித செயல்களைச் செய்கின்றனர். உயிர்கள் ஆசை வழியே சென்றாலும் உயிர்கள் மீது கொண்ட பேரன்பினால் அவர்களின் பிறவியை அறுக்கும் ஒரு வழியாக தூய்மையான அன்பை வைத்து இருக்கின்றான். ஆசை வழியே சென்று துன்பத்திற்குரிய காரியங்களைச் செய்யும் உயிர்களானாலும் தூய்மையான அன்புடன் இருந்தால் அவர்களுக்கு வேறு பிறவியில்லாத முக்தியை இறைவன் அவர்களுக்கு வழங்கி அருளுவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.