பாடல் #288

பாடல் #288: முதல் தந்திரம் – 19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னை
பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்
தேசுற் றறிந்து செயலற் றிருந்திடில்
ஈசன்வந்து எம்மிடை ஈண்டிநின் றானே.

விளக்கம்:

இரவு பகல் என்று பார்க்காமல் எப்போதும் தம்மை தூய்மையான அன்பில் வைத்துப் போற்றித் தொழும் உயிர்களை சிவபெருமான் அறிவான். ஜோதியாக அவன் வந்து கலந்துவிடுவான் என்பதை அறிந்து கொண்டு எந்தச் செயலுமின்றி நாம் தியானத்தில் இருந்தாலே போதும். அந்தச் சிவபெருமானே நமது முன்னால் வந்து நம்மோடு அன்பில் கலந்து நிற்பான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.