பாடல் #825

பாடல் #825: மூன்றாம் தந்திரம் – 19 பரியங்க யோகம் (போகத்தை யோகமாக்குதல்)

பூசு வனவெல்லாம் பூசிப் புலர்த்திய
வாச நறுங்குழலில் மாலையுஞ் சாத்திக்
காயக் குழலி கலவியொ டுங்கலந்
தூசித் துளையுறத் தூங்காது போகமே.

விளக்கம்:

உடம்பில் பூசுவதற்கு ஏதுவான வாசனை திரவியங்களையெல்லாம் பூசிக்கொண்டு நீராடி காயவைத்த நறுமணம் கமழும் கூந்தலில் வாசனையுள்ள மலர்களையும் மாலையாகச் சூடிக்கொண்டு மனதை மயக்குகின்ற மங்கையோடு கலவியில் ஒன்றாகக் கலந்து இருக்கின்ற போதும் ஊசியில் நூல் கோர்ப்பது போல நெற்றிக்கு நடுவில் உள்ள சுழுமுனை நாடியின் உச்சித்துளை வழியே மூச்சுக்காற்றை செலுத்திக் கொண்டே இருக்கின்ற யோகியர்களுக்கு போகம் எப்போதும் அழியாது.

குறிப்பு: ஆணும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர் போகத்தில் இருக்கும் போது அதை யோகமாக எப்படி மாற்றுவது என்பதை விளக்குவதே பரியாங்க யோகமாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.