பாடல் #72

பாடல் #72: பாயிரம் – 4. குரு பாரம்பரியம்

எழுந்துநீர் பெய்யினும் எட்டுத் திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர்சடை யோடே
அழுந்திய நால்வர்க் கருள்புரிந் தானே.

விளக்கம்:

ஏழு கடல்களும் பொங்கியெழுந்து ஏழு மேகங்களும் மும்மாரி மழையைப் பொழிந்து எட்டுத் திசைகளும் நீரால் நிரம்பினாலும் (நீரினால் வரும் ஊழிக்காலப் பேரழிவு வந்தாலும்) பிறப்புக்கு உயர்வைத் தருகின்ற தன்மையுடைய நியமங்களைச் (நல் அறங்கள்) செய்துகொண்டே இருங்கள் என்று அனைத்தையும் பாதுகாத்து அருளுபவனும் சிவப்பான தன்மையுடைய பவளம் போன்ற மேனியை உடையவனும் குளிர்கொண்ட மேகம் போன்ற தன்மையுடைய விரிந்த சடையை உடையவனுமான இறைவன் தன் திருவடியைப் பணிந்து தொழுத நான்கு சனகாதி முனிவர்களுக்கும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர்) அருளினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.