பாடல் #71

பாடல் #71: பாயிரம் – 4. குரு பாரம்பரியம்

மொழிந்தது மூவர்க்கும் நால்வர்க்கும் ஈசன்
ஒழிந்த பெருமை இறப்பும் பிறப்பும்
செழுஞ்சுடர் முன்னொளி யாகிய தேவன்
கழிந்த பெருமையைக் காட்ட கிலானே.

விளக்கம்:

எம்மிடம் சீடர்களாக இருந்த ஏழு பேர்களுக்கும் எம்முள் இருந்து எம்மூலமாக மந்திரங்களை வழங்கியது இறைவனே. அவன் பிறப்பும் இறப்பும் இல்லாத பெருமையை உடையவன். சூரியனின் ஒளி தோன்றுவதற்கு முன்பிருந்து எப்போதும் மாபெரும் ஒளியாக இருப்பவன் அவன். அவனுடைய பெருமைகளை அவன் அருளின்றி யாரிடமிருந்தும் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே நாம் இறைவன் அருள் பெற்ற குருநாதர்களின் மூலம் இறைவனின் தன்மைகளையும் அவனை அடையும் வழிகளையும் தெரிந்து கொண்டு அவன் அருள் பெற்று அவனை அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.