பாடல் #533

பாடல் #533: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை

மந்திரம் ஓரெழுத் துரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

விளக்கம்:

ஓம் என்ற பிரணவ மந்திரத்தில் பெரிய தவங்களைச் செய்தவர்களின் மனம் வருந்தும்படி தீமைகள் செய்தவர்கள் பசியால் வருந்தி அலைகின்ற நாயாகப் பிறந்து பின்னர் மனிதப் பிறவி எடுத்தாலும் எண்ணில் அடங்காத தாழ்ந்த பிறப்பு எடுத்து இறப்பார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.