பாடல் #533: இரண்டாம் தந்திரம் – 22. குரு நிந்தை
மந்திரம் ஓரெழுத் துரைத்த மாதவர்
சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூறுரு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.
விளக்கம்:
ஓம் என்ற பிரணவ மந்திரத்தில் பெரிய தவங்களைச் செய்தவர்களின் மனம் வருந்தும்படி தீமைகள் செய்தவர்கள் பசியால் வருந்தி அலைகின்ற நாயாகப் பிறந்து பின்னர் மனிதப் பிறவி எடுத்தாலும் எண்ணில் அடங்காத தாழ்ந்த பிறப்பு எடுத்து இறப்பார்கள்.
