பாடல் #513

பாடல் #513: இரண்டாம் தந்திரம் – 18. தீர்த்தம் (உள்ளத்தின் புனிதம்)

கடலிற் கெடுத்துக் குளத்தினிற் காண்டல்
உடலுறத் தேடுவார் தம்மையொப் பாரே
திடமுற்ற நந்தி திருவரு ளாற்சென்
றுடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே.

விளக்கம்:

கடலினில் ஒரு பொருளைத் தொலைத்து விட்டு அதை கடலினில் தேடாமல் குளத்தில் தேடி அலைவதைப் போல உடலில் இறைவனே பல தீர்த்தங்களாக இருப்பதை அறியாமல் வெளியே தேடி அலைகின்றனர். உயிர்களின் உயிரை உறுதியாக பற்றிக்கொண்டிருக்கும் குருநாதனாகிய இறைவன் தனது திருவருளால் உடலுக்குள்ளேயே புகுந்து இருப்பதை ஒருவரும் அறியாமல் இருக்கின்றனர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.