பாடல் #433

பாடல் #433: இரண்டாம் தந்திரம் – 12. திரோபாவம் (வினைகள் முடியும் வரை மறைத்தல்)

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே.

விளக்கம்:

இறைவன் உயிர்களை படைக்கும் தொழிலுக்கு காரியம் புரியும் தெய்வங்களாகிய உருத்திரன் மாபெரும் தவம் புரிபவனாகிய திருமால் வேதங்கள் ஓதி உயிர்களையும் அவை உலகத்தில் அடையும் இன்பத்தையும் படைத்த பிரம்மன் ஆகிய மூவரும் ஒன்றாகச் சேர்ந்து இறைவனின் கட்டளைக்கு ஏற்ப செய்த வலிமை மிக்க இரும்பாலான இயந்திரம் போன்ற உடலுக்குள் மாயையால் மறைத்து இறைவன் வைத்த ஒரு மாபெரும் பரிசு இருக்கின்றது. அதை உயிர்கள் அறியவில்லை.

உட்கருத்து: உலகத்தில் உயிர்களை படைத்த இறைவன் அதன் வினைகளை அனுபவித்துக் கழிக்கும் வரை அந்த உயிர்களைப் பாதுகாக்க இறைவனே மாபெரும் பரிசாக உயிர்களின் உள்ளத்திற்குள் இருக்கின்றதை மாயையால் மறைத்து அருளுகின்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.